Dhinamum Ennai Kavani

Tuesday, March 27, 2007

World Cup - 2007

போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு பீலிங்கு...பீலிங்கு எல்லாம் இல்ல அதுதான் உன்மைனு நீங்க சொல்றது கேக்குது...ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன கேள்வி...பாலசந்தர்,பாரதிராஜா,பாக்கியராஜ்,பார்திபன் மாதிரி நல்ல டைரக்டர்ஸ்னால இப்போ எல்லாம் நல்ல படம் குடுக்க முடியலயே அது ஏன்...ஏன்னா சரக்கு தீந்து போச்சு...அவ்வளோ பெரிய அறிவாளிங்களுக்கே இந்த நிலமைனா நான் எல்லாம் எம்மாத்திரம்....

இப்போ forward mail போஸ்ட்ல போடுறதுதான் பேமஸ்...அதுனால இப்பதான் வந்தது வேற யாரும் போடுறதுக்கு முன்னாடி நாமலும் போட்டுறலாம்னுதான்.....world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது....

" நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!
கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..

இது forward mail ல வந்தாலும் அது ஒரிஜினலா ஆசிப் மீரான் பிளாக்ல இருந்து கிளம்பி இருக்கு...நன்றி ராம்..

April ல நம்ம வ.வ.சங்கம் முதல் வருட "ஆணி"வர்சரி கொண்டாடுராங்க...அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க...அது என்ன அட்லாஸ் வாலிபர்னு கேக்கறீங்களா...உலகத்த எப்படி அட்லாஸ் தாங்கறாரோ அது மாதிரி உலகம் பூரா இருந்து வர ஆப்புகள நம்ம தல கைப்பு சொல்லி குடுத்தமாதிரியே வாங்கறது தான்...நெக்ஸ்ட் வீக்ல இருந்து அங்க வந்து ஆணி,கும்மி எல்லாம் அடிச்சு ஆதரவு குடுங்க....

Tuesday, March 13, 2007

The Eagle

Some how I like this bird very much...don't know why...wanted to write a poem about it..here it goes...



HE clasps the crag with crooked hands;

Close to the sun in lonely lands,

Ringed with the azure world, he stands.


The wrinkled sea beneath him crawls;

He watches from his mountain walls,

And like a thunderbolt he falls.


Eagle பத்தி poem எழுத Google help பண்ணுச்சு, yes yes sutufying from google search...நீங்க இந்த poem பார்த்திட்டு almost heart attack range க்கு போய்ருப்பீங்கனு தெரியும்...no silly peelings pls.....relax.... மத்தபடி கருடனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ...ஆபிஸ்ல ஏகப்பட்ட ஆணி சேந்து போச்சு அதுனால உக்காந்து யோசிக்க நேரம் இல்ல...இதுவும் ஒரு பொழப்பானு துப்பனும்னு தோனிச்சுனா துப்பார்க்கு "துப்பாக்கி" அப்படிங்கற திருக்குறள் நினைச்சுக்குங்க நல்லா துப்ப வரும் :-)
மக்கள்ஸ் ஒரு சின்ன update:
பசுமை விகடன் இன்னைக்கு தான் படிச்சேன்...அது படிக்கும் போது எனக்கு தோனுனது...இங்க உங்காந்து இந்த டேமேஜருங்க சொல்ற துரு புடிச்ச ஆணிய புடுங்கி புடுங்கி...ஆணி புடுங்கற மிசினாவே மாறிட்ட மாதிரி ஒரு பீலிங்கு...பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....
இந்த poem எழுதுனவரு Lord Alfred Tennyson, இத சொன்ன KK & minerva க்கு ஒரு நன்றிங்கோ...நமக்கு தெரிஞ்சதெல்லாம் லார்டு லபக்குதாஸ் தான்....

Wednesday, March 07, 2007

அன்புடன்...அம்பது :-)

எப்படியோ நானும் அடிச்சு புடிச்சு 50 போஸ்ட் போட்டுடேன்....நம்ப முடியல....இவ்வளவுக்கு காரணம் நீங்க நீங்க நீங்க மட்டும் தான்.....ஒரு ஒருத்தர் பேரயும் தனி தனியா போடனும்னு ஆசை இருக்கு...ஆனா அதுக்கு மட்டும் ஒரு ரெண்டு போஸ்ட் வேனும்

ஒரு ரகசியம் வெச்சுக்க விட மாட்டேங்குறாங்க(வடிவேல் கிரி படத்துல பேக்கரி வாங்கின மாதிரி)..என்ன பெரிய onion special ஹெ னு இதயும் கண்டு புடிச்சிட்டாய்ங்க....

ஸ்பெசல் போஸ்ட்னு வேற பில்டப் குடுத்தாச்சு என்ன எழுதறதுனு ஒன்னும் தோனல...சரினு அப்படியே யோசிச்சு பார்த்தேன்...நம்ம மக்கள் 50,100 னு அடிச்சவங்க எல்லாம் என்ன பண்ணி இருக்காங்கனு...பரணி கான்சப்ட் காப்பி அடிக்கறதுனு முடிவு பண்ணிட்டேன்.....

சன் டிவில அன்புடன்னு ஒரு புரோக்கிராமு...கெலதமி வந்து கமல் கிட்ட இண்டர்வியூ பண்ணாங்க...அது பார்த்திட்டு இருக்கும் போது போன் வந்தது...யாருனு பாத்தா கெலதமியே தான்...நீங்க ஒரு பேட்டி குடுக்கனும்னு சொன்னாங்க...இனி...

கெலதமி - உங்க blog life ல எத மைல் கல்லுனு சொல்றீங்க?

நான் - உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லயா...கமல் கிட்ட கேட்ட கேள்வி என்கிட்ட அப்படியே கேக்கறீங்களே....

கெ - உங்க எழுத்துல மத்த பிளாக் மக்களோட சாயல் தெரியுதே..குறிப்பா டுபுக்கு
நா - ஏங்க உங்களுக்கே தெரியாதா...எங்க life copy,paste ல தான் ஓடிட்டு இருக்கு...அதுனால copy அடிக்கறதுனு ஆச்சு..டுபுக்கு எனக்கு குரு...இத எல்லாம் போய் பப்ளிக்ல கேட்டுக்கிட்டு..சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு...

கெ - உங்க post லயே எது best மொக்கைனு நினைக்கறீங்க?
நா - என்னோட படைப்புல எது பெஸ்ட்னு கேட்டா என்ன சொல்றது
கெ - மனசுக்குள் (லூசா இவன்...நான் என்ன கேட்டேன் இவன் என்ன சொல்லிட்டு இருக்கான்)

கெ - உங்கள நாட்டாமை,முதல்வர்,பக்கார்டி பாஸ்கர் னு சொல்றாங்களே அது பத்தி...
நா - நல்ல கேள்வி...எல்லா blog லயும் புளியோதரை line ல first நின்னதால shuba நாட்டாமையா ஆக்குனாங்க..line அ correct பண்றதுக்கு...அப்புறம் நம்ம மு.க ஒரு பாசத்துல டம்மி முதல்வர் பதவி குடுத்தார்...அப்புறம் எல்லா போஸ்ட்லயும் பக்கார்டி பத்தி சொல்றதால ஜி வந்து பக்கார்டி பாஸ்கர்னு போட்டு தாக்குனாரு...இதுக்கு இடையில நம்ம KK வந்து Dr.நாட்டாமைனு பட்டம் குடுத்தாரு...நாய்க்கு பேரு ஜார்ஜ் புஷ் னு சொல்ற மாதிரி....

கெ - நீங்க கவிதை எழுதி இருக்கீங்க அது பத்தி...
நா - வெச்சீங்களே ஆப்பு...நானும் கவிதை எழுதி அது நம்ம blog மக்கள் எல்லாம் படிச்சாங்க..வாலி,வைரமுத்து,இளையராஜா கிட்ட கூட காட்டினேன்...எல்லோரும் சொன்ன ஒரே பாராட்டு...த்த்த்த்த்தூதூதூதூ

நான் - நீங்க இவ்வளவு கேள்வி கேட்டீங்களே நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன்....இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?
கெ - டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்....

HAPPY WOMEN'S DAY!!!